பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இங்ஙனம் வளர்ந்த உயிரைத் தாக்கி வீழ்த்தும் ஆணவத்தின் செயலை ‘வாசனாமலம்’ என்பர். ஆணவத்தினோடு இரண்டறக் கலந்திருந்த பொழுது அடையும் துன்பத்தை விட வாசனாமலத்தால் தாக்கப்படும் துன்பம் கொடிது! கொடிது!

மழை பெய்கிறது! மழை பெய்து ஓய்ந்துவிட்டது! மழை பெய்தபொழுது மரத்து இலைகளின் மறைவில் ஒதுங்கிப் பாதுகாத்துக் கொண்ட பறவைகள், மழை ஓய்ந்தவுடன் இலைகளிலிருந்து விழும் சொட்டுகளின் குளிரைத் தாங்க முடியாமல் தவிப்பதாகக் காஞ்சிப் புராணம் கூறும்.

துய்க்காமலே அடையும் துன்பத்தைவிடத் துய்த்து, பின் அத்துய்த்தலில் இடையறவு ஏற்படும்பொழுது அடையும் துன்பத்தின் அளவு மிகுதி. அதனால் ஒன்றினைப் பெறுவதைவிடப் பெற்றதைப் பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம். பாதுகாக்கும் பணியே பெரும்பணி! இதனை ஆங்கிலத்தில் Follow up என்று சொல்வர்.

நிர்வாக இயலில் தொடர் கண்காணிப்பு மிகவும் இன்றியமையாதது. இறைவன் உயிர்களுக்கு இன்பத்தை வழங்கியிருந்தாலும் அதனை அந்த உயிர்கள் தொடர்ந்து அனுபவிக்கும்படியும் வழி நடத்துகின்றான்; கண்காணிக்கின்றான்.

மாணிக்கவாசகரைத் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் எழுந்தருளி ஆட்கொண்டருளினான். ஆனந்த மாய இன்பத்தை வழங்கியருளினான். பின், மாணிக்கவாசகரைத் தொடர்ந்து அவர்பெற்ற இன்ப அனுபவத்தை அவர் இடையறாது அனுபவிக்குமாறு கண்காணித்து நிலை நிறுத்திக் கொள்கின்றான்.

மாணிக்கவாசகரைத் தொடர்ந்து காப்பதற்காகவும், அவர் தோய்ந்த இன்ப அன்பின் அனுபவம் இடையீடு