46
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
என்ற திருவாசகப் பாடல் தாயன்பின் பெருமை, உடலை அடக்கியாளும் ஆன்ம நலம் கருதி ஆட்கொண்டருளல், தொடர்ந்து காக்கும் இறைவனின் கருணை ஆகியவற்றை விளக்கும் இனிய பாடல்!
பதம் தந்த பரமன்
ஏன் இறைவன் புறம் புறம் திரிய வேண்டியிருக்கிறது? ஆன்மாவுக்கு அருமை எது, பெருமை எது என்று எளிதில் புலனாகாது; புலனானாலும் சோர்வினால் நெகிழவிடும். ஊனுடம்பு வளர்ந்தாலும் பலர் ஆன்ம நிலையில் யாதொன்றும் அறியா நிலையில் இருப்பர்.
குழந்தைகளுக்குப் பொற்கிண்ணத்தின் அருமை தெரியுமா? கையில் உள்ள பொற்கிண்ணத்தை விளையாட்டுப் பொம்மைக்கும் சுவைத்துத் தின்னும் மிட்டாய்க்கும் ஈடாகக் கொடுத்துவிடுமே!
அதுபோலத்தான் மனிதர்கள் இறைவன் அருளிய பேரருட் கொடையாகிய மானுடப் பிறவியின் பெற்றிமையை உணர்வதில்லை! மானுடம் பிறவியை முறையாகப் பயன்படுத்திப் பயன்பெறுவோர் எத்தனை பேர்?
“என்னால் அறியாப் பதந்தந்தாய்
யான் அது அறியா தே கெட்டேன்
உன்னால் ஒன்றும் குறைவில்லை
உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும்
பழைய அடியா ரொடுங்கூடாது
என்நா யகமே பிற்பட்டிங்
இருந்தேன் நோய்க்கு விருந்தாயே!”
என்ற பாடலை உணர்க!