48
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு
ஒருவ னேகிற்றி லேன் கிற்பன் உண்ணவே
என்ற பாடலால் இதனை அறியலாம்.
தனித்துணை
மாணிக்கவாசகர் தனித்துணையைப் பெற்றவர். ஆயினும் தனித்துணையின் அருமை தெரியாமல் தன் போக்கில் நடந்து கொண்டதாகத் தன்னை நொந்து கொள்கிறார். வாழ்க்கைப் பயணத்திற்கு வழித்துணை தேவை.
நம்முடைய வாழ்க்கைக்குப் பல துணைகள் வந்து சேர்கின்றன. தந்தை, தாய்கூடத் துணைதானே! இந்த அற்புதமான பிறவிக்குக் கருவியாக இருந்தவர்கள் அவர்கள். ஆயினும் காலம் அவர்களைப் பிரித்துவிடுகிறது.
மனைவி ஒரு துணையே! ஆயினும் என்? மனைவியும் எல்லா நிலைகளிலும் ஒத்து நிற்பவளா? பிணக்கே கொள்ளமாட்டாளா? ஆதலால், மனைவியும் தனித்துணை ஆக இயலாது. அடுத்து நண்பன் - தோழன். இவனும் என்றும் எப்போதும் எங்கும் எல்லாச் சூழ்நிலையிலும் துணையாக அமைந்து விடுவான் என்று கருதமுடியாது.
கடவுள் அப்படியல்ல. கடவுள் ஏழ்பிறப்பும் துணை; நரகொடு சுவர்க்கத்திலும் துணை. ஆதலால், இறைவனைத் தனித்துணை என்றார். தனித்துணை ஆற்றுப்படுத்தும் வழி, வாழ்தல் வேண்டும். மூளையை மட்டும் நம்பக்கூடாது. இதயத்தையும் நம்பவேண்டும்.
“தனித் துணை நீ நிற்க யான் தருக்
கித்தலை யால் நடந்த
வினைத் துணை யேனை விடுதிகண்
டாய் வினை யேனுடைய