86
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மாணிக்கவாசகர் துறைதோறும் வளர்ந்தவர். திருவாசகம் ஓர் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆன்மா அதன் பயணத்தை இறைவனின் கருணையினால் கருவூரில் தொடங்குகிறது. திருவூரில் பயணம் நிறைவுறும். பயணம் செவ்வியதாக அமைந்தால் எளிதில் திருவூரை ஆன்மா அடையும். பல ஆன்மாக்கள் தத்தம் விருப்பம் மேவிய தடத்தின் வழியே மட்டும் பயணம் செய்வதன் விளைவாகப் பயணம் நீட்டிக்கவும் செய்யலாம்.
மானிடப் பிறவியின் தகுதிக்கு ஏற்றவாறு வாழ்ந்திடா விடில் என்ன நிகழும்? மீண்டும் புழுவின் பிறப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்று அப்பரடிகள் கூறுகின்றார்.
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
நின்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரம்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி இருந்தருள்
செய்பா திரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே!
என்னும் அப்பரடிகள் திருப்பாடலை ஓர்க. மேலும் மானிடப் பிறவிக்கு மட்டுந்தான் நினைக்கும் புலன் உண்டு; திறன் உண்டு. அப்பரடிகள்.
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்
இம்மூவுலகுக்(கு)
அன்னையும் அந்தனு மாவாய் அழல்வனா
நீயலையோ