பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

சேக்கிழார் பிறந்த திருப்பதியில் சேக்கிழார் விழாக் காணக் கூடியிருக்கும் மெய்யன்பர்களே! அருள் நலம் சான்ற அடிகள் பெருமக்களே! இந்த இனிய வாய்ப்பினை வழங்கிய மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் அவர்களே! அமைச்சரின் கருத்தறிந்து செயற்பாடு நிகழ்த்தும் அறநிலையத் துறை ஆணையர் அவர்களே! அறிஞர் பெருமக்களே! திரு நெறிய தொண்டின் நெறி மண்ணில் நின்று நிலவ, புகழ்மிக்க வரலாற்றுக் காப்பியத்தை அருளிச் செய்த சேக்கிழார் பெருமானின் சேவடிகளைச் சென்னி மேற்கொண்டு போற்றுகின்றனம்.

ஒப்பற்ற சாதனை

சேக்கிழார் இயற்றித் தந்துள்ள காப்பியத்தில் வரும் வரலாற்று நாயகர்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்; பல்வேறு நாட்டில் வாழ்ந்தவர்கள்; பல்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள்; பல்வகைத் தொண்டுகளை மேற்கொண்டு வாழ்ந்தவர்கள். இவ்வளவையும் சேக்கிழார் கற்றும் தேர்ந்தும்


* 5.6.1986 அன்று குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை எடுத்த சேக்கிழார் விழாவில் அடிகளார் ஆற்றிய தலைமை உரை.