பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராட்டு–நன்றி

சேக்கிழார் திருவடிகளைப் போற்றிச் சென்னிமேற் கொண்டு விழா எடுத்த தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை ஆணையருக்குப் பாராட்டுக்கள். இன்று நம்முடைய தலைமுறையில் சமய மறுமலர்ச்சிக்குரிய பலபணிகளைச் செய்து வருகின்ற மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி! கடப்பாடு! விழாவிற் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வாழ்த்தியருளும் அடிகள் பெருந்தகைக்கு நன்றி! அறிஞர்களுக்கு பாராட்டு! சேக்கிழாரின் செவ்விய குறிக்கேளாக விளங்கிய "திசையனைத்தின் பெருமையெலாம் தென்திசையே வென்றேற”ச் செய்வோமாக! எவ்வுலகிலும் இம்மண்ணுலகம் சிறப்புடைய தென வாழ்ந்து காட்டு வோமாக! அயல்வழக்கின் துறைகளைவென்று, செழுந்தமிழ் வழக்கினை நிலைபெறச் செய்வோமாக! ஐயன் அரனுக்குப் பொருளாகிய அன்பினை வளர்ப்போமாக! உயிர்க்கு ஊதியமாகிய தொண்டினைச் செய்வோமாக! திருக்கோயில் வழிபாடு நாள்தோறும் இயற்றுவோமாக! அணி அணியாகத் திரண்டு சென்று கூட்டமாக வழிபடுவோமாக! இறைவனைத் தலைவனாகக் கொண்ட ஒப்புரவு நெறி கொண்டொழுகும் ஒருகுலம் ஆவோமாக!

என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கு நிலவி உலகெலாம்.