பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

235


நஞ்சி இடைஇன்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சியிட் டாற்பின்னைச் செய்வதென் னடிகேள்
சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோபணி யிரருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்குஞ் சீர்முது குன்றரே!.

(ஏழாந்திருமுறை - 435)


என்று தொடங்கி பதினொரு பாடல்கள் பாடி வேண்டுகிறார்.

இத்திருப்பதிகம் செந்தமிழ்ச் சுவை நிறைந்தது; நகைச்சுவை ததும்புவது. இறைவனை ஆரூரர் தோழமை யாகப் பெற்ற உரிமையில் எண்ணியவாறெல்லாம் பேசுகிறார். மானிட வாழ்க்கையின் சுவை நிறைந்த உணர்வுகளை இத்திருப்பதிகத்தில் அனுபவிக்க முடிகிறது. சேக்கிழாரின் துணையின்றி இத்திருப்பதிகத்தை நாம் படித்தால் சுந்தரர் மீது ஆற்றொனா வருத்தம் ஏற்படும். 'ஏயர் கோன்கலிக்காமர்கள் பலர் தோன்றிவிடுவர். ஆனால், சேக்கிழார் “நஞ்சியிடை” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிய சுந்தரரை,

"நாதர்பால் பொருள்தாம் வேண்டி
நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
"மெய்யில் வெண்பொடி"யும் பாட

(பெரிய புராணம். ஏயர்கோன் - 186)


என்று அறிமுகப்படுத்துகிறார்.