பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

239


இடமாய், உறுதிப்படுத்தப்பெற்ற இடமாய் இருத்தல் வேண்டும்.

மற்றவர் மருள...

பழமலையுடையார் அருளிச்செய்த பன்னிரண் டாயிரம் பொன்னை ஆரூரர் அள்ளிச் செல்லத் தயாராக இல்லை! பொன் அவருக்கு ஆரூரில் கிடைக்க வேண்டும். பொன் கிடைத்தால் மட்டும் போதாது. இப்பன்னிரண்டாயிரம் பொன் ஆரூரில் கிடைக்கும் வகையில் ஆரூரில் உள்ளோர் மருள வேண்டும். இதற்குத் தக்கவகையில் பொன் ஆரூரருக்கு வந்தாக வேண்டும்.

ஒவ்வொருவரும் அவரவர் தம் வாழ்க்கை நடத்தால் சரி என்று நினைக்க மாட்டார்கள், அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் மயங்க வேண்டும் அதிசயமுறுதல் வேண்டும் என்று விரும்புவது உலகியல். இந்த உலகியல் விருப்பார்வம் நம்பி ஆரூரரையும் பிடித்தாட்டு கிறது. இறைவன் இதற்கும் உடன்படுகிறான்! ஆயினும் இறைவன் ஆரூரரை வாளாவிருக்க விடவில்லை. "இப் பொன்னை எடுத்துப் போய் மணிமுத்தாற்றில் இடுக! திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்க’ என்று அருள்மொழி செய்தார்.

பொன்னை மனிமுத்தாற்றிற்கு எடுத்துச் செல்லும்பணி ஆரூரருடையதாகிறது. ஒரு பொருளை எடுத்துச் செல்வதில் ஆற்றல் மிக்குடையது தன்னிர்! நிலத்தடியில் நீரோட்டம் பரவிக் கிடக்கிறது. அந்நீரோட்டத்தின் வழி எளிதில் பொருள்களை எடுத்துச் செல்லலாம் என்ற உலகியல் உணரத் தக்கது.

நடைமுறைக் கடமை

இந்த வரலாற்றுக்கு இவ்வுண்மை எவ்வாறு பொருந்தும் என்பது ஆய்வுக்குரியது. ஆரூரர் ஆற்றில்