பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) இலுப்பை வளர்ப்புப் பணியாளர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், அவர்கள் - - நலனுக்குரியன நாடுதல்.
17. கண்ணப்ப நாயனார். தை-மிருகசீரிடம். (1) திருக்கோயில்-திருமடத்தில் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கண் ஆய்வு செய்தல்.
(2) தேவையானால் கண் மருத்துவம் செய்தல்-தேவைக்குக் கண்ணாடிகள் வாங்கித் தருதல்.
(3) பக்தி இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல்.
(4) வலையன் சமூக (கண்ணப்பர்குல) மக்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
18. கலிக்கம்ப நாயனார் தை - இரேவதி (1) திருக்கோயில்-திருமடத்தில் வேலைசெய்யும். கடைநிலை ஊழியர்களின் மதிப்புயரக் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(2) அவர்களுடைய சமய உணர்வு வளர்ச்சிக்கு வழி வகுத்தல்.