பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(2) நம்முடைய திருக்கோயில்கள் மடங்களில் வழிவழி வழிபாடு செய்யும்-செய்துகொள்ளும் எந்த அன்பரோடாயினும் ஏற்பட்டுள்ள வழக்கில் விட்டுக்கொடுத்து உடன்பாடு காண முயற்சி செய்தல்.
62 வாயிலார் நாயனார் மார்கழி-இரேவதி. (1) சிவபூசை செய்வோர், திருக்கோயில்-திருமடங்களைச் சார்ந்து பணிசெய்வோர் ஆகியோருடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டல், அவர்கள் நலனுக் குரியன நாடுதல்.
(2) எல்லோரையும் சிவபூசை செய்யத் தூண்டுதல்.
(3) சமய-விசேட தீக்கை செய்ய ஏற்பாடு செய்தலும், பலரைச் சிவபூசை செய்யத் தூண்டுதலும்.
(4) பலர்கூடிச் சிவபூசை செய்ய ஏற்பாடு செய்தல்.
(5) சிவபூசை செய்வோருக்குப் பூசைக்குரிய கலன்கள் வழங்குதல்.
63 விறன்மிண்ட நாயனார். சித்திரை-திருவாதிரை (1) தக்க சிவனடியார்களுக்குப் பாங்காக இருந்து பரிவு காட்டுதல்.