பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கினார்கள்; விடும் வேண்டாது, கூடும் அன்பினிற் கும்பிடுதலாகிய ஒரு செயல் கிடைத்தால் போதுமானது என்று அவர்களது நெஞ்சங்கள் ஏங்கின. ஆனந்த நடனமாடும் ஆண்டவனது குனித்த புருவத்தையும் பணித்த சடையையும் பவள மேனியையும் அம்மேனியில் திருநீறு அணிந்த காட்சியையும் பாதம் துரக்கி ஆடும் அற்புத அழகையும் காணவே-மானிடப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்றார்கள்,

இறைவனை எட்டத்தில் வைத்து ஏதோ வாழ்வோடு பிணைப்பில்லாத வாழ்த்துப் பொருளாக்கிக் கோவில் களிலும் குருக்கள்.மாரின் சமீபத்திலும்தான்் கடவுளை வணங்க வேண்டுமென்று கருதுநிற சமுதாயத்துக்கு நல்லதொரு விழிப்புணர்வை நமது நாயன்மார்கள் கொடுக் கிறார்கள். பொன்னும் மெய்ப்பொருளும் தந்து போகமும் திருவும் புணர்ப்பவராக நமது கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நம்மவர்களிடையே தோன்ற மன்றுளார் அடியார் பாடுபட்டுழைத்தார்கள். அவர்களது வாழ்க்கை முறையிலேயே-தொண்டு தெய்வத்தன்மை வாய்ந்தது என்றும் தொண்டல்லாது உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் நாம் அறியக் கூடியதாயிருக்கின்றன.

தமிழர் வாழ்வு இசையோடு இணைந்தது. ஏழி சையாக-அவ்விசைகளின் பயனாக இறைவனைக் கண்ட வர்கள் தமிழர்கள். இயற்கையை வர்ணித்து அதன் வழி ஆண்டவனைக் கண்டு வணங்கிய இனமும் தமிழினந்தான்். இத்தகைய தமிழர் நிலை சமணர்களது குறுக்கீட்டால் பிறழக் கூடாதெனக் கருதியே, ஞானச் சம்பந்தர் தமிழர் நாகரிகம் காக்கப் புறப்பட்டார். தமிழர் நாகரிகம் பேணப் படவேண்டி சம்பந்தர் சமணர்களோடு வாதிட்டார்- வென்றார். இந்த வாதத்தை சமயச் சண்டையாக எண்ணி விடுதல் தகாதது. சண்டை வேறு-பாதுகாக்க எடுக்கும் முயற்சி வேறு.