பக்கம்:குப்பைமேடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 
சீற்றம்

-1-

பானு. அவள் முழுப்பெயர் உதயபானு. அவள் இதயம் அறிந்து அவளுக்கு மிக்க இடத்தில் வாழ்க்கையைத் தேடித் தந்தார்கள். எப்பொழுதும் இவள் அல்லவா அதிருஷ்டக்காரி என்று பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். சாத்தியம் இல்லாத பாத்தியம் ஏற்பட்டுவிட்டால் இப்படிப் பேசுவது பழக்கமாகிவிட்டது.

அவளைப் பற்றி இப்பொழுது என்ன சொல்கிறார்கள்? ‘வாழா வெட்டி’ என்ற பட்டம் கட்டி அவள் வாழ்க்கையை எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். அவள் அஞ்சு மாதம் குழந்தையை அழகாகக் கையில் வைத்துக்கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தாள். தாய்மை அவள் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/103&oldid=1115458" இலிருந்து மீள்விக்கப்பட்டது