170
ராசீ
வாகி வருவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தெரிந்தது அவள் சீற்றத்துக்குக் காரணம் விளங் கியது.
“அவள் மாற்றத்துக் காரணம் யாது”
குழந்தை பிறந்த செய்தி சொல்லப்பட்டது.
“லட்சங்களைப் படைத்திருக்கிறாளா? என்ற மாமனார் வீட்டில் இருந்து எழுந்தது ஒர் எதிரொலி;அந்த எதிரொலி தான் இந்த விரிசலை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.
வாழ்த்துதலை எதிர்பார்த்தாள்; அதற்கு மாறாகத் தாழ்த்துதல் தான் கிடைத்தது. தன்னையோ தன் பெற் றோர்களையோ அவர்கள் இழிவு படுத்தியதை அவளால் தாங்கிக் கொள்ள முடிந்தது. புதிய முளை அதைக் களை யாகக் கருதியதை அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக் கொளுத்தினாள். பிறக்கும் போதே பெண்ணினத் துக்கு ஒரு எதிர்ப்பா? அதுதான் அவள் சீற்றத்துக்குக் காரணமாக விளங்கியது என அறிய முடிந்தது.
“அவள் எதிர்காலம்?”
“அவள் நடத்தும் ‘மகளிர் குரல்’; அதுதான் பதில் சொல்ல வேண்டும் அதைப் பற்றி நான் கவலைப்படுவதை விட்டு விட்டேன்.