இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“எப்படிடா இருக்காரு உன் மைத்துனர்?” என்று கேட்டேன்.
“அவர் காந்தி சீடர்; எதற்கும் பிரயோசனம் இல்லை” என்று பதில் சொன்னான் ரகுராமன்.
ரகுராமனும் நானும் ஒன்றாகப் படித்தவர்கள். அவன் என்னைவிடப் படிப்பில் கெட்டிக்காரன். நிறைய மார்க்கு வாங்குவான். மெடிக்கல் சீட்டுக் கிடைத்தது . டொனேஷன் கொடுக்கத் தேவை இல்லாத காலம். சாதி பேதம் தலை காட்டாத சூழ்நிலை. சிபாரிசு மட்டும் கொஞ்சம் தேவைப்பட்டது. தேர்வாளர்கள் யாராவது