இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குப்பைமேடு
21
-4
குப்புசாமி அடிக்கடி வந்து என்னிடம் பேச்சுக் கொடுப்பான்.
'ஏன் சார்! இப்பொழுது எல்லாம் எழுதுவது இல்லையா' என்று கேட்டான்.
'ஏன் என் கதைகள் உனக்குப் பிடிக்குமா' என்று கேட்டேன்.
'நீங்கள் கிழித்துப்போடுiாகளே அந்தத் தாள்களைப் பொறுக்குவது என் பிழைப்பு. இப்பொழுது ஏன் அதிகம் கிழிப்பது இல்லை' என்று கேட்டான்.
'பத்திரிகைகளுக்கு அனுப்புவது இல்லை; அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி விடுவார்கள். அதனால் வேறு வழியில்லாமல் கிழித்துப் போடுவேன்'.
'ஏன் இப்பொழுது பத்திரிகைகளுக்கு அனுப்புவது இல்லை'?
'பத்திரிகை ஜன ரஞ்சகமானது.
என் விஷயங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பத்திரிகைகள் சதா வாசகர்களைப் பற்றிக் கவலைப் படுவார்கள்."
'உங்கள் கதைகளை யார் படிப்பார்கள்?'