பக்கம்:குப்பைமேடு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்ச்சி

229

மாட்டி இருந்தார்களாம். அதே பழக்கம்தான் இவரை இவ் வழிபாட்டுக்கு உரியவர் ஆக்கியது.

வாழ்க, வாழ்க! ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வாழ்க! என்று பள்ளி தொடங்குவதற்கு முன் அந்தக் காலத்தில் பாடிக் கொண்டிருந்தார்களாம். நான் படித்தது ஆரம் பத்தில் ஒரு கிறித்தவர் நடத்திய பள்ளி, அதில் ஒரு ஜெபத்தைச் சொல்லச் செய்வார்கள்.

'ஆண்டவனே! எனக்கு இன்றைய ரொட்டித் துண்டு கிடைக்குமாறு செய்க' என்ற கருத்து அமைந்த பாட்டாக இருந்தது. அந்தப் பிஞ்சு உள்ளத்தில் கடவுளை வழிபட் டால்தான் அன்றாடம் ரொட்டித் துண்டு கிடைக்கும் என்பது ஆழமாகப் பதிந்து விட்டது. இன்று அதே நல்ல பழக்கம் அவரிடம் அமைந்தது கண்டு மகிழ்ந்தேன்.

'தான் தாங்கி இருக்கும் பதவிக்குத் தலைவர்' என்ற நன்றி உணர்வு அவரிடம் வெளிப்பட்டது.

தன் கணவர் மீது காயத்திரியின் தாய்க்கு அபார மதிப்பு ஏற்படத் தொடங்கியது. துப்பு இல்லாத ஒரு வரை மணந்தது தப்பு என்று பல தடவை சொல்லி அங் கலாய்த்து இருக்கிறார். இப்பொழுது தான் கேட்பதற்கு முன் கொண்டு வந்து சேர்க்கும் தாராளத்தைக் காண முடி கிறது. நிறைய அழைப்பிதழ்களுக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டியாயிற்று. அரங்குகளில் நடக்கும் அரங் கேற்றங்களுக்கு இவரைத் தலைமை தாங்கச் சொல்லி இருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/231&oldid=1116157" இலிருந்து மீள்விக்கப்பட்டது