அதிர்ச்சி
239
விடுவது நல்லது தான்; இந்தத் துணிவோடு அவர்கள் சந்திப்பில் இப்பேச்சு இடம் பெற்றது.
அவள் கண்ணாமூச்சி விளையாட விருப்பவில்லை; கண்களைக் கட்டி விட்டு என்னைத்தொடு என்று அலைக் கழிக்க நினைக்கவில்லை. திறந்திருந்த நிலையில் தன்னைத் தொடும்படி அருகில் நின்றாள்.
“என் கரங்களை இறுகப் பற்றிக் கொள்' என்றாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
'இல்லாவிட்டால் விழுந்து விடுவேன்' என்றாள்.
இது வரை டியூட்டுக்கு இசையாதவள் இப்பொழுது ஒரு புதிய பாட்டுக்கு டியூன் போடுவதை அவனால் உணர
முடிந்தது.
அவனே சற்று விலகி நின்றான்; அணைப்பு அவனை அழைக்கிறது; அதற்கு அவன் அஞ்சுகிறான்.
'என்னை எதுவும் எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள்வீரா?' என்று கேட்டாள்.
'கனவுகள் காத்துக் கிடக்கின்றன; அவையே என் எதிர்பார்ப்புகள்" என்றான்.
'என் தந்தை ஒரு சல்லிக் காசு கூட நமக்குத் தர மாட்டார். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வீர்களா? சுத்தமான காதலாக இருந்தால் சுகாதாரமான வாழ்வு வாழ முடியும்' என்றாள்.