பக்கம்:குப்பைமேடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குப்பைமேடு 79 என்பது உங்கள் உடல் வலிமை என்று மற்றவர்கள் மதிக் கலாம். என்னைப் பொறுத்தவரை உங்கள் எண்ணத்தில், எழுத்தில் இந்த ஆண்மையை எதிர்பார்க்கிறேன். அதற்கு ஆளுமை என்று சொன்னாலும் ஒப்புக் கொள்கிறேன். அதைத்தான் மனிதம் என்கிறேன். நான் நிறைய எழுதிவிட்டேன். நேரில் பேச முடிய வில்லை; இன்னும் நிறைய எழுதுவேன்; சிறுக எழுதினால் அது நறுந்தேன். கடிந்து எழுதினால் அது கடுந்தேள். அதனால் இதோடு விடுத்தேன்' என்று முடித்தாள். என் பொறுமைக்கு ஒர் எல்லை உண்டு என்பதை அறிந்தவள் போல் அவள் எழுதியதை முடித்துக் கொண் டாள். இந்தக் கடிதம் என்னை ஆட்டிப்படைத்து விட்டது. கடும் செய்தியை அவள் அறிவித்தாள்; ஆனால் அவள் நேர்மை கண்டு முதிர்ச்சி பெறுகிறேன். அவள் உண்மைதானே எழுதுகிறாள். இன்று இத்தகைய சோதனைகள் ஏற்படுவது இயற்கைதான். மனைவி என்பவள் ஒருவனுக்கு உடைமை என்பதால் வரும் சிக்கல் கள்தான் இது. அவள் எனக்குத் துணைவி; அவள் ஏற் கனவே மணமானவள்; விவாகரத்து செய்து கொண்டவள் என்று தெரிந்துதான் மணந்தேன். அதற்கப்புறமும் இப்படி ஏற்படும் விளைவுகளைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும், அதிர்ச்சிக்கு என்ன இருக்கிறது. அழகான குழந்தையோடு வருகிறாள். அவள் வாழ்க் கையில் ஒரு மாற்றம். அன்பின் வளர்ச்சி, எங்கள் இரு வருக்கும்தான் உலகம் என்று அமைத்துக் கொண்ட மண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/81&oldid=806359" இலிருந்து மீள்விக்கப்பட்டது