பக்கம்:குமரப் பருவம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குமரப் பருவம்

ஓரளவுக்குத்தான் குறையும். அழுத்தமும், நயமும் மட்டும் ஏற்படுவதுண்டு.

பையனுடைய குரல் மாறுதல் நன்கு அமைந்து அதிலே நயம் ஏற்படுவதற்கு மலர்ச்சியெய்தியபின் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். அதுவரையில் அவன் தனது குரல் திருப்தியில்லாமலிருப்பதைக் கண்டு பல சமயங்களில் சங்கடப்படுகிறான்.

மற்ற உடலுறுப்பு வளர்ச்சியைப் பொறுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பல சங்கடங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பருவத்தின் தொடக்கத்திலே உறுப்புக்கள் எல்லாம் ஒரே அளவாக வளர்வதில்லை. கை, கால், மூக்கு ஆகிய உறுப்புக்கள் பொதுவாக விரைவில் வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கண்டு சிறுவர்களும் முக்கியமாகச் சிறுமிகளும் கவலையடைகிறார்கள்.

அழகான ஆண் உருவம் அல்லது பெண் உருவம் எப்படி அமைய வேண்டும் என்று அனைவரும் அநேகமாக ஒரே மாதிரியான கருத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறுபட்டால் குமரப் பருவத்தினர்க்கு அது பெரிய கவலையைத் தருகின்றது. அதன் காரணமாகத் தாழ்வு மனப்பான்மை கூட ஏற்படுகிறது. குள்ளமாக இருப்பதை உணர்ந்து குமரன் வருந்துகிறான்; அதிக உயரமாக வளர்ந்துவிட்டால். அதைக் கண்டு குமரி வருந்துகிறாள்.

குமரப் பருவத்திலுள்ள ஆண்களுக்குக் கீழ்க்கண்டவை முக்கியமாகக் கவலையளிக்கின்றன:–

1. உடல் தோற்றம், முக்கியமாக உயரம் சரியாக அமையாதிருத்தல்.

2. கொழுப்பதிகமாகி உடல் பருத்திருத்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/23&oldid=1229579" இலிருந்து மீள்விக்கப்பட்டது