பக்கம்:குமரப் பருவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 குமரப் பருவம் பெண்டிற்கழகு" என்ற வாக்கியம் எப்படியோ அவர் களுக்குப் பிடிபட்டுவிடும். இதுபோலவே மற்ற வகை களிலும் குமரப்பருவத்தினர் தங்கள் தோற்றத்தைச் செம்மையர்க அமைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். உடல் வளர்ச்சியும், மலர்ச்சி யெய்துவதும் வயதிற்குத் தக்கவாறு எல்லோருக்கும் ஒரே சமயத்தில் ஏற்படுவதில்லை; இதிலே ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டென்று முன்பே குறிப்பிட்டேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதிலே வேறுபாடு உண்டு; பெண்களுக் குள்ளேயும் வேறுபாடு உண்டு. இவ்வாறு ஆண்களுக்குள்ளேயும், பெண்களுக்குள் ளேயும் வேறுபாடு காண்பதும் கவலைக்கும் ஏமாற்றத் திற்கும் காரணமாகிறது. ஒத்த வயதினரைப்போலத் தானும் வளர்ச்சியடையவில்லையே என்று ஆண் கவலைப் படுகிருன்; பெண்ணும் கவலைப்படுகிருள். மேலே கூறிய குறைகளெல்லாம் மனத்திலே பதிந்து பலவகைக் கோளாறுகளுக்கும் காரணமாகின்றன என்பதை நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டும். நடத்தையிலே மாறுபாடு மலர்ச்சி யெய்தும் ப்ருவத்திலே மனத்தின் தன்மைகளில் ஏற்படும் மாறுதல்களை இனி முக்கியமாகக் கவனிப்போம். மலர்ச்சி யெய்தத் தொடங்குமுன் உடல் வேகமாக வளரத் தொடங்குகிறதல்லவா? அந்தச் சமயத்திலே அதிலும் குறிப்பாக மலர்ச்சி யெய்துவதற்குச் சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/25&oldid=806549" இலிருந்து மீள்விக்கப்பட்டது