பக்கம்:குமரப் பருவம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளக் - கிளர்ச்சிகள் 33 யவைகளுக்கு ஏற்பச் சூழ்நிலை அமைவதில்லை. அவர்களுக் குண்டாகும் ஆழ்ந்த ஆசைகளுக்கும் மற்ற இயல்பான மனப் போக்குக்களுக்கும் தடையாகப் பல சமயங்களிலே சூழ்நிலை குறுக்கிடுகின்றது. பெற்ருேர்களும் மற்றவர் களும் விதிக்கும் கட்டுப்பாடுகளை அப்பருவத்தினரால் எளிதில் ஏற்றுக்கோள்ள முடிவதில்லை. அவர்கள் தங்களை மற்றவர்கள் பெரியவர்களாக மதித்து நடத்த வேண்டு மென்று விரும்புகிருர்கள். மேலும் குழந்தைப் பருவத் தைக் கடந்து வந்த குமரனுக்கும் குமரிக்கும் மலர்ச்சி யெய்துகின்ற காலத்திலே புதிய நிலைமை ஏற்படுகின்ற தல்லவா? அதற்குத் தக்கவாறு நடந்து கொள்வதிலும் சங்கடங்களும், தவறுகளும் ஏற்படுகின்றன. இந்தப் பருவத்தினரிடம் பரிவோடு அவர்களுக்குப் பெற்ருேர்களும் மற்றவர்களும் வழி காட்டுவார்களாளுல் உள்ளக் கிளர்ச்சிக் குமுறல்கள் அதிகமாக இரா. குமரப் பருவத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக் குழந்தைப் பருவ இறுதியில் முன்னதாகவே பயிற்சியும் ஆலோசனைகளும் தருவதும் நல்லது. குமரப் பருவத்தினரின் மனப் போராட்டங்கள் நல்ல முறையிலே தீர்ந்துவிட்டால் வாழ்க்கையில் நுழைவதற்கு வேண்டிய நம்பிக்கையும் உற்சாகமும் மிகுகின்றன. இல்லாவிடில் தோல்வி மனப்பான்மையும் சோர்வும் தலை காட்டத் தொடங்குகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமரப்_பருவம்.pdf/34&oldid=806571" இலிருந்து மீள்விக்கப்பட்டது