பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 குமரியின் மூக்குத்தி

'அந்த வைர மூக்குத்தி!' என்று கத்துவாள். குலோத் துங்க மன்னன் என்ன என்னவோ சமாதானம் செய்தான். ஒன்றாலும் அவள் ஆறுதல் அடையவில்லை. தன் கீழ்ச் சிற்றரசனாக இருக்கும் ஒருவனிடம் உள்ள பொருளைத் தா என்று கேட்பது சக்கரவர்த்தியின் நிலைக்கு ஏற்ற செயல் அல்லவே! அதனால் சோழ மன்னன் அந்த முக்குத்தியைப் பெற என்ன வழி என்ற ஆலோசனையில் ஆழ்ந்தான். - பட்டமகிஷி முக கமலம் வாட்டம் அடைந்தது. மன்ன னுடைய முகத்திலும் வாட்டம் தன் ரேகையை நீட்டியது. அதைக் கண்ட கருணாகரத் தொண்டைமான் என்ற மந்திரி ஒருநாள் மன்னனைத் தனியே கண்டான். நெடுநாளாக மன்னன் எதையோ நினைத்து மனம் கவல்கிறான் என்பதை உணர்ந்து, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு இருந்து வந்தது. இப்போது அவன் அரசனிடம், 'மகாராஜாவுக்கு ஏதோ கவலை உள்ளத்துக்குள் இருந்து வாட்டுகிறது. போலத் தோன்றுகிறது. மந்திரிமார்களும் படைத் தலைவர் களும் சான்றோர்களும் மன்னர்பிரானுக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்ல எப்போதும் ஆயத்தமாக இருக்கும்போது, அவர்களிடம் சொல்லாத கவலை என்ன வென்று தெரியவில்லை. இதைப்பற்றி நினைத்தால் எனக்குத் துாக்கமே பிடிப்பதில்லை. மற்றவர்களுக்குத் தெரிவிக்கத் திருவுள்ளம் இல்லாவிட்டால் அடியேனுக்குச் சொல்ல லாமே. அடியேன் ஏதாவது செய்ய முடிந்தால் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன்” என்றான்.

அரசன் சிறிது யோசித்தான். பிறகு புன்னகையை வருவித்துக் கொண்டான். 'நீ ஊகித்தது சரிதான். ஆனால் விஷயம் என்னவோ சிறியது. கவலேதான் பெரிதாக இருக் கிறது” என்றான்.

"எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாமே. மகாராஜாவின் திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு