பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழலின் குரல்

45

ஒன்றுதான் அவனுக்குத் தெரியும்; குழலின் ஒலி தெரியாது. யாருக்குமே தெரியாது. இப்போது குழலின் ஒலியை அவள் குரலாக அவன் எண்ணினான்-அதை ஊதிக்கொண்டே உலாவினான். அவனுடைய சோககீதம் அதிலிருந்து வெளியாயிற்று.

அவன் ஊத ஊத அவனுக்கே ஒருவிதத் தேர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அது ங்அவனுக்கே தெரியவில்லை. அவள் தான் வேறு வேறு வகையில் குரல் கொடுக்கிறாள் என்று நினைத்தான். ஊதிக்கொண்டே இருந்தான்.

அதுதான் உலகில் முதல்முதல் உண்டான குழல்.அதைக் கண்டு பிற்காலத்தில் புல்லாங்குழல் உண்டாக்கினார்கள். தன் காதலியே குழலாக இருந்து குரல் கொடுக்கிறாள் என்ற மயக்க உணர்வோடு முருகன் வாழ்ந்தான். அவன் சோகத்தில் பிறந்தது புல்லாங்குழல்.