பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

குமரியின் மூக்குத்தி

படக்காரன் மேலிருந்த தலைவர் நடராஜன் படத்தை மெல்ல எடுத்தான். என்ன ஆச்சரியம்! உள்ளேயும் நடராஜன் படம்! க. ம. கட்சித் தலைவர் நடராஜன் அல்ல; முருகேசனுடைய குலதெய்வமாகிய நடராஜன். ஆம்! பூஜை யறையிலே இருந்த அந்த நடராஜப் பெருமான்.

அப்படியானல் இத்தனை காலமும் நடந்த விழாக்கள்-?

அடுத்த நாளே முருகேசன் கடவுள் மறுப்புக் கட்சியினின்றும் விலகிக் கொண்டான். அவன் வீட்டுக் கூடத்தில் மறைந்து நின்று அவனுடைய பூஜையை ஏற்ற நடராஜப் பெருமான் வெளிப்பட்டுவிட்டார்!

இதோ முருகேசன் வாயாரப் பாடுகிறது காதில் கேட்கிறது:

"தன்மை பிறரால் அறியாத
தலைவா! பொல்லா நாயான
புண்மை யேனை ஆண்டு.ஐயா
புறமே போக விடுவாயோ?
என்னை நோக்கு வார்யாரே?
என்நான் செய்கேன் எம்பெருமான்?
பொன்னே திகழும் திருமேனி
எந்தாய் எங்குப் புகுவேனே?" !

--திருவாசகம்.