26
யாத்திரை போகலாம் என எண்ணிய பரமசிவம் விண் தொட முயலும் நீள்முடி இமயத்தை லட்சியமாகக் கொண்டு கம்பி நீட்டிய கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
தன்னுடைய லட்சியம் இப்படித் திடீரென்று மிக உயர்ந்துவிட்ட காரணத்தினால் ’வால்’ பரமசிவம் குமாரிகளையும் குட்டிகளையும் பற்றிக் கவலைப்படுவ தையே விட்டுவிட்டார். திடீரெனத் தோன்றி மறையும் உண்மையான வால் வெள்ளியின் பண்பே ’வால் நட்சத்திரம்' பத்திரிகைக்கும் வாய்த்தது என்பதை உணர்ந்த குமாரி செல்வாவும் அப்புறம் ஆசிரியரைப் பற்றி கவலேப்படவில்லை.
புகழ்ப்பசி மிகுந்த அவளுக்கு ’சரி. ஏதோ கொஞ்சம் புகழுக்கு வழி கிடைத்தது. கிடைத்தவரை லாபம் தானே! என்று தோன்றியது. நடந்ததைப் பற்றி எண்ணுவதில்லை அவள். நடப்பதைக் குறித்து மனதை அலட்டிக்கொள்ளும் வழக்கமும் அவளிடமும் கிடையாது. இனி நடக்கப்போவதை நினைத்து ஏங்குவதுயில்லே. எதெது எப்படி எப்படி நடக்குமோ அப்படி கடந்துவிட்டுப் போகட்டுமே என்ற அலட்சியம் அவளுக்கு உணவு, உடை, உற்சாகம், உல்லாசப் பொழுது போக்குகள், இஷ்டம்போல் தின்றுகொண்டிருக்க ஐஸ்க்ரீம்-இவை தட்டுத் தடங்கலின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கிற வரை அவள் ராணிபோல் வாழ முடியாதா என்ன!
⚫’அவளை ராணிபோல் வாழவைக்க முடியும்; அதற்கு என்னாலானதைச் செய்வேன்’ என்று சொல்லி முன்வந்தான் ராஜா. அவன் ஒரு செல்லப்பிள்ளை.
செல்வம் அவனிடம் சதிராடிக்கொண்டிருந்தது. கார் இருந்தது. பகட்டும் குணமிருந்தது. பணத்தைத்