பக்கம்:குமாரி செல்வா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27


தண்ணிர்போல் பாவிக்கும் மனமிருந்தது. அவனை நாடி நண்பர்கள் கூடாமல் போவார்களா ?

ராஜா காலேஜில் ’கல்யாணப் படிப்பு’ படித்தானே தவிர, கல்வி பெறவேண்டும் என்றோ, பெருமைக்குப் பட்டம் பெறவேணும் என்றோ ஆசை கொண்டவனல்ல. பொழுது போகாத வேளையில் பள்ளிக்கூடம் போவதும், பள்ளிக்கூடத்திலே தங்கியிருக்க ’மூடு’ இல்லாதபோது ஜாலியாக ஊர் சுற்றுவதுமாக வாழ்ந்த அவன் பார்வையில் அழகி செல்வா படாமல் தப்ப முடியுமா? அதிலும் அவள் ரொம்ப ’பிரீயாகப்’ பழகும் பண்பினள் என உணர்ந்தபின் அவன்தான் சும்மா இருக்க இயலுமா!

ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்தின் விசேஷ விழாவில் கலந்து சிறப்பித்த குமாரி செல்வா அந்தக் கலையழகு குலையாமல் மெதுநடை நடந்துகொண்டிருக் தாள் வீடு நோக்கி. நிலந்தடவும் நீண்ட பாவாடை அலையலையாய் சுருண்டு பளபளத்து அசைய, மேலே கிடந்த பகட்டான் தாவணி கவனத்தை இழுக்க, பூ முடித்த கூந்தல் தனியெழிலுடன் மிளிர, பவுடர்-கண் மை-லிப்ஸ்டிக் முதலிய ’மேக்அப்’ பூச்சுகள் பளிச்சிட ஆடி அசைந்து சென்ற செல்வா ரோட்டில் செல்லும் அனைவரது பார்வையையும் இழுக்கும் வனப்புச் சுட ராக விளங்கினாள்.

பின்னால் காரில் வக்த ராஜாவின் மனதை அலைக் களித்தது அசைந்து சென்ற குமாரியின் சிங்காரத் தோற்றம். வேகமாக முன் சென்றுவிட்ட காரிலிருந்து திரும்பிப் பார்த்த ராஜாவின் பார்வையைக் குமாரியின் முழுகிலவு முகமும், காந்தக் கண்களும் வசீகரித்தன. ஆகவே காரை நிறுத்தினான்.

பொங்கிவரும் அலைபோல் காம்பீர்யமாக நடந்த அழகி அருகே வந்ததும் வீட்டுக்குத்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/29&oldid=1315682" இலிருந்து மீள்விக்கப்பட்டது