பக்கம்:குமாரி செல்வா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36


லீணன் என்று எண்ணினாள். சிடு சிடுத்தாள். எரிந்து விழுந்தாள். ஏசினாள். அவன் உறவு தேவையில்லே என்று சுட்டவும் தயங்க வில்லை.

இதற்குள் குமாரி செல்வா ’நாட்டிய, அழகி’ என்று பெயர் பெற்று விட்டாள். ராஜாவின் செல்வமும், துனையும், உழைப்பும் அதற்கு எவ்வளவோ உதவீன. சென்றதை எண்ணிக்கொண்டிருக்கும் பண்பு பெற்றிராத செல்வா அதை யெல்லாம் பெரீது படுத்த முடியுமா என்ன !

அவ்வேளையில் அவள் புகழை அதிகரிக்கும் திறமையும் தகுதியும் காட்டிய நிபுணர் கலையானந்த ரிடம் தான் உள்ளன என்று நிச்சயமாகத் தெரிந்தது. அவளுக்கு நடனம் கற்றுக்கொடுக்க வந்தவர் அவர். புதுப்புது நடனங்களைக் கற்பித்துப் பழக்கி அவள் திறமைக்கு வளர்ச்சியும் புதுப்பொலிவும் அளிக்க முயன்றவர். அவருக்கு வயது முப்பத்தைந்து தானிருக்கும். அழகர். குளுமையாகப் பேசுவார். நல்ல பெய ரிருந்தது அவருக்கு.

ராஜாவின் உறவில் அலுத்துப் போன குமாரி செல்வா கலையானந்தரைத் தழுவும் பூங்கொடியானாள். அவள் போக்கைக் கண்டித்த ராஜாவை விரட்டி யடித்தாள்.

’எனக்கு எல்லாம் வேண்டியதுதான். சரியான பாடம் படித்தேன்’ என்று தன் அனுபவத்தையும் பணச்செலவையும் ’புத்திக் கொள்முதல் கணக்’கிலே பதிவு செய்து கொண்ட ராஜா அவள் உலகிலிருந்து அஸ்தமனமாகி விட்டான். அதற்காக அவள் வருந்த வில்லை.

அவனும் ஏங்கிச் செத்துவிடவில்லை. தனது குலத் துப் பெரியோர்கள் தேர்ந்து கிச்சயித்தபடி சுபயோக சுபமுகூர்த்தத்தில்ே செளபாக்கியவதி ஒருத்தியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/38&oldid=1315714" இலிருந்து மீள்விக்கப்பட்டது