பக்கம்:குமாரி செல்வா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


'வாழ்விலும் எவ்வளவோ மாறுதல் ஏற்பட்டு விட்டது ஸார்!'

'இருக்கட்டுமே. நீங்கள் என்றுமே குமாரியாக வாழத் திட்டம் போட்டு விட்டீர்கள் போலிருக்கு! நான் போய் வருகிறேன்' என்று நகர்ந்தார் அவர்.

'உங்களைப் பார்த்து ரொம்ப ரொம்ப நாளாச்சு. இல்லையா ஸார்?' என்று கேட்டாள் குமாரி.

'ஆமாம். ஏழு வருஷங்கள்!' என்று சொல்லி விட்டு நடந்தார் பரமசிவம்.

'யார் அது?' என்று கேட்ட ஆண் குரலும், 'அவர்தான் வால் நட்சத்திரம்னு ஒரு பேப்பர் நடத்தினாரே, அந்த ஆசிரியர்' என்ற குமாரியின் பதிலும் அவர் காதில் விழுந்தன.

'ஓகோ! அவனா! உருப்படத் தெரியாத பரமசிவமா!' என்று கூறிக் கனைத்தார் புதுப்பேர்வழி. அந்தக் கனைப்பும் ஆசிரியர் காதில் பட்டது.

இந்த மதிப்புரை ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்வையே தந்தது. 'நம்ம நாடும் மனிதர்களும் கொஞ்சம் கூட மாறாத பண்பினராக வாழ்கிறார்களே! பளா பளா!' என்ற திருப்தியை உண்டாக்கியதுதான் காரணம்.

 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/44&oldid=1396425" இலிருந்து மீள்விக்கப்பட்டது