பக்கம்:குமாரி செல்வா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7 அவசியம் திருத்தம் வெளியிட்டே ஆகணும். அதற்கு நீங்களே சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது நல்லது.' ...” நீங்கள் சொன்னாலே போதும். ஏதோ கைத் தவறுதல், அச்சுப் பிழை, கவனக் குறைவு, ஞாபக மறதி போன்ற காரணத்தினாலே மீண்டும் தவறு ஏற்படாமவிருப்பதற்காகவே நீங்கள் அளந்து சரிபார்க்க வேண்டும் என்கிறேன். உம். சீக்கிரம் ஸார். எனக்கு நேரமில்லை. வேறு அலுவல்கள். இருக்கின்றன, போக வேண்டும்’ என அவசரப் படுத்தினாள் அலங்காரி. . தலையைச் சொரிந்த ஆசிரியர், தட்டிக் கழிக்க ஒரு காரணம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்து, இங்கே டேப் இல்லே. அளக்க முடியாதே' என்றார். அது அற்பாயுள் சந்தோஷமாக முடிந்தது. - டேப் வேண்டாமே. இதோ ஸ்கேல் இருக்கு. நூல் இருக்கு. நூலை இடையைச் சுற்றிப்பிடித்து அளந்து அப்புறம் புட்ரூலில் கணக்குப் பண்ண முடி யுமே!’ என்று வழி வகுத்துக் கொடுத்தாள் யுவதி. பரமசிவம் பாடு பரம சங்கடமாகிவிட்டது. பலத்த தயக்கத்திற்குப் பிறகு துணிந்து விட்டார் அவர். அவள் சொன்னபடியே நூலினால் அவளது இடையின் அளவைக் கணித்தார். விரல்கள் நடுங்க, கைகள் பதற அவர் வெள்ளிய நூலை அந்தப் பாவாடை அழகியின் இடையளவு காணச் சுற்றும்போது, அவள் ஆடை களும் உடலும் எழுப்பிய சுகந்த மணமும், பெண்மை யின் அருகாமையும், அந்தப் புது அனுபவமும் அவர் உள்ளத்திலே கிளறிய உணர்ச்சிகள் தனிரக அவியலே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமாரி_செல்வா.pdf/9&oldid=1394003" இலிருந்து மீள்விக்கப்பட்டது