42
z.
姆 1. வாழ்த்து
திருவருட்பா
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே !
காணுர்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே! வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே !
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே! கல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுகின்ற நடுவே !
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே! எல்லார்க்கும் பொதுவில் கடமிடுகின்ற சிவமே !
என்னரசே யான்புகலும் இசையுமணிங் தருளே !
-இராமலிங்க சுவாமிகள்
இப்பாடல் திருவருட்பா என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டது. இதைப் பாடியவர் இராமலிங்க சுவாமிகள் என்பவர். இவரை வள்ளலார் என்றும் கூறுவர். இவர் மருதூரில் பிறந்தவர்; இவர் தந்தையார் இராமய்யப்பிள்ளை; தாயார் சின்னம்மை. இவர் கருணிகர் குலத்தைச் சேர்ந்தவர். இவர் சமயம் சைவம்: இவர் வடலூரில் முத்தியடைந்தார்; இவர் இருந்த காலம் 19-ஆம் நூற்ருண்டு. இவர் எழுதிய வசன நூல்கள் மனு முறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பன.
.
அருஞ் சொல்
களிப்பு - மகிழ்ச்சி. கண் - அறிவு, மதி அறிவு, சுரர் -
தேவர், பொது - சபை,