இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
77
4. சதகங்கள் வேண்டத்தக்கவை
வாலிபந் தணில்வித்தை கற்க வேண்டும் கற்ற
வழியிலே நிற்க வேண்டும்: வளைகடல் திரிந்துபொருள் தேட வேண்டும் தேடி
வளரறஞ் செய்யவேண்டும்: சீலமு டையோர்களைச் சேர வேண்டும், பிரிதல்
செய்யா திருக்க வேண்டும். செந்தமிழ் பாடல்பல கொள்ள வேண்டும் கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்; ஞாலமிசை பலதருமம் நாட்ட வேண்டும் நாட்டி
நன்ருய் நடத்த வேண்டும்; நம்பனிணை அடிபூசை பண்ண வேண்டும்: பண்ணி,
ஞலுமிகு பத்தி வேண்டும்: ஆலமர் கண்டனே பூதியணி முண்டனே! அழகனெம தருமை மதவேள் அனுதின மும்மண தினினே தருசதுர கிரிவளர்
அறப்ப ளிசுர தேவனே! (1) -அம்பலவணக்கவிராயர்.
வேண்டாதவை
பெற்றதாய் தந்தைதன் சுற்றமே முதலான பெரியோரை முனிதல் வேண்டா,
பின்னென்று முன்னென்று பேசியே அவமானப்
பேர்கொண்டு திரிதல் வேண்டா;
உறவர்கள் போலஉள் பகையான வஞ்சகரை
ஒருநாளும் நம்ப வேண்டா :