பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

பொம்மைகளை, இரு கம்பெனிகளும் கையில் வைத்துக் கொண்டு, ‘இதில் எந்தப் பொம்மை ஆர்க்காட்டு நவாப் ஆவது என்பதே எங்கள் போருக்குக் காரணம்’ என்று கூறிக் கொண்டன. ஆங்கிலக் கம்பெனியின் கையில் இருந்த பொம்மை முகம்மது அலி; பிரெஞ்சுக் கம்பெனியின் கையில் இருந்த பொம்மை சந்தா சாகிபு.

முகம்மது அலி கிருஷ்ணா நதி முதல் கன்னியாகுமரிக் கடல் வரை தம் நாடு என்று வாயால் அளந்து காட்டினார். ஆனால், திருச்சிராப் பள்ளியில் தவிர, வேறு ஓரிடத்தில் காலூன்றவும் முடியாத நிலை 1751இல் அவருக்கு இருந்தது. தலைநகராகிய ஆர்க்காடு உட்பட வட பகுதிகள் யாவும் பிரெஞ்சுக் கும்பெனி ஆட்டுவித்தபடி ஆடும் சந்தா சாகிபுக்கு ஆட்பட்டிருந்தன. நாட்டின் பிற பகுதிகளிலெல்லாம் குட்டி அரசுகள் கோலோச்சின. முகம்மது அலி ஒண்டி ஒடுங்கிக் கிடந்த திருச்சிராப்பள்ளியே, பிரஞ்சுப் படைகளால் எந்த நேரத்திலும் கைப்பற்றப்படும் நிலையில் இருந்தது. இந்நிலையில், முகம்மது அலிக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவர் பெயரைச் சொல்லி நாடாளும் நிலை பெற்றுப் பிரஞ்சுக் கம்பெனியை ஒழித்துக் கட்ட உறுதி கொண்டது ஆங்கிலக் கும்பினி. எனவே, திருச்சிக்கு வந்த ஆபத்தைத் தவிர்க்கக் கருநாடகத்தின் தலைநகராகிய ஆர்க்காட்டுக்குத் தீ வைக்கும் இராஜ தந்திர முயற்சியில் ஆங்கிலக் கும்பினி ஈடுபட்டது. அதற்கு ஏற்ற தளபதியையும் கண்டு பிடித்தது. அவர்தாம் இராபர்ட் கிளைவ். ஆங்கிலப் பேரரசை அமைப்பதற்கு