பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பின் சதித் திட்டங்கள் நாளுக்கு நாள் உரம் பெற்றன. அவை ஒன்று விடாமல், ஆங்கிலக் கும்பினிக்கும் தெரிந்தன. கான் சாகிபின் பிரெஞ்சுத் தோழன் தளபதி மார்ச்சந் ஆங்கிலக் கும்பினிக் கொடியைக் கொளுத்தி விட்டுப் பிரெஞ்சுக் கொடியைக் கான் சாகிபின் அனுமதி பெற்றே, கோட்டைகளின் மீது உயர்த்தியது முதற்கொண்டு எல்லாச் செய்திகளும் சென்னைக்கு எட்டின; கும்பினி அரசாங்கத்தின் கண்கள் சிவந்தன; எட்டுத் திசைகளிலும் இருந்த ஏகாதிபத்திய ஏஜெண்டுகளுக்கு எச்சரிக்கைச் செய்திகள் பறந்தன. எந்த வினாடியிலும் கான் சாகிபைத் தாக்கி முறியடிக்கக் கும்பினிப் படைகள் தயாராயின. இதற்கிடையில் கான் சாகிபைச் சென்னைக்கு வந்து சமாதானங்களைக் கூறவும், சந்தேகங்களை நீக்கவும் கும்பினி அரசாங்கம் அழைத்தது. ஒவ்வொரு முறையும் நொண்டிச் சமாதானங்கள் கூறி, வர முடியாது என்றான் கான் சாகிப். அதைக் கேட்ட வெள்ளை வேந்தர்களின் வயிறு பற்றி எரிந்தது. ஏறத்தாழ இரண்டாண்டு காலமாகக் கான் சாகிபு, தன்னைத் தென்பாண்டிப் பாளையங்களின் சக்கரவர்த்தியாக்கிக் கொள்ளச் செய்த சதிகள் யாவும் பல வாயில்களாலும் தெரிந்து விட்டன. எனவே, ‘எல்லாக் கடமைகளிலும் பெருங்கடமை கான் சாகிபைக் கொல்லும் கடமையே’ என்று கும்பினி வர்க்கம் குமுறியது.

கும்பினி அரசாங்கத்துக்கு 1763 மார்ச் 24-ஆம் தேதி வெள்ளைத் தளபதி லாரன்சிடமிருந்து கிடைத்த கடிதம் வருமாறு: “கான் சாகிபு விசுவா-