பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

குயிலும்...சாரலும்

ஓ! என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்

நாவலந்தீவு நம்மைவிட்டுப் போகாது.

எவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறான். சுரண்டுவதற்கும், அடிமைகளாய்க் கூலிகளாய் வேலைவாங்குவதற்கும் ஏற்ற ஒரு நாட்டையிழந்துவிடுவோமோ என்று பயப்படுகிறீர்களா? பயப்படத் தேவையில்லை. ஏனென்றால்,

வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்களென்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்

ஏக மனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?

பேதங்கள் பல இருக்கும்போது அவர்கள் ஒன்று சேர்ந்து போராடி நம்மை எதிர்த்து விரட்டி யடிக்க முடியாது. மேலும் மேலும் பேதம் வளர்த்துக் கொண்டேயிருக்க அங்கே இரண்டு சக்திகள் உள்ளன. அவை யிருக்கும்வரை நமக்குக் கவலையில்லை. அவை என்ன?

பேதம் வளர்க்கப் பெரும்பெரும் புராணங்கள்!

சாதிச் சண்டை வளர்க்கத்தக்க இதிகாசங்கள்!

இவை மட்டுமல்ல, மக்களை மடையர்களாகவே ஆக்கி நிரந்தரமாய் அடிப்படுத்தி வைத்திருக்க பூசுரர்கள் இருக்கின்றார்கள்.

கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி யளக்கும் குருக்கள் கணக்கற்றார்.
தேன்சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு

வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.

சேறுபோல் சூழ்ந்திருக்கும் இந்தச் சிக்கலிலே மாட்டிக் கொண்டிருக்கும் இந்திய மக்கள், இந்தச் சேற்றிலிருந்து கரையேறி நம்மை எதிர்த்து விரட்டுவது என்பது நடக்காத காரியம் என்று ஆங்கிலேயன் கூறுகிறான்.