பக்கம்:குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாரதிதாசன்

நாட்டினில் மூடக் கொள்கை
    நாட்டித்தம் வாழ்வை யின்பத்
தோட்டமாய் அமைத்துக் கொள்ளத்
    தோன்றிய கயவ ரெல்லாம்
ஏட்டினை மூட்டை கட்டி
    எடுத்தனர் ஒட்ட மென்னப்
பாட்டினை முழக்கு கின்றோன்

    பாரதி தாச னன்றோ?


கம்பனும் பாடி வைத்தான்
    கவிநயம் சொட்டச் சொட்ட
என்பவர் தாமும் பொய்யே
    எழுதினா னென்று சொல்வார்!
நம்புதற் கியலாப் பாதை
    நடப்பதில் உள்ள கேட்டை
மன்பதைக் கெடுத்து ரைத்தோன்

    பாரதி தாச னன்றோ?


தமிழெனில் உயிரே யென்பான்
    தரிக்குமென் மூச்சே யென்பான்
அமிழ்தெனு முணவே யென்பான்
    அகத்தெழு முணர்ச்சி யென்பான்
கமழ்ந்திடு மணமே யென்பான்
    கவிதையின் சுவையே யென்பான்
தமிழ்க்கவி பார திக்குத்

    தாசனும் நானே யென்பான்!

(நாச்சியப்பன்பாடல்கள்-தொகுதி. 2)