பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கு இதமான சுகச் சூடு தரும் சூரியன் உன்னையன்றி வேறில்லை. ஆனால் - இப்போது உன் கையில் விளையாடும் காதலன் யாரென்று என்னால் ஊகிக்க முடியவில்லை.

(அன்பு வில்லிக்குப் பதில் கடிதம்) மேரியா! ஒரு கவிஞன் தன் உள்ளத்தில் திடீரென்று குதித்தெழுந்த கவிதைச் சொல் ஒன்றை மறப்பதற்கு எப்படி அஞ்சுவானோ அது போல் - உன் பெயரை மறக்க நான் அஞ்சுகிறேன். மேரியா!' போரில் மிஞ்சிய தனது ஒற்றைக்காலை ஒரு போர் வீரன் எப்படி நேசிப்பானோ அது போல, உன் பளிங்குமேனியை நான் நேசிக்கிறேன். ஆனால்... .. நீ என்னை விரும்பவில்லை.

I 1 &