பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லொர்கா

நான் - கொலை செய்யப்பட்டதை உணர்ந்தேன்

அவர்கள் . . . உணவு விடுதிகளிலும் இடுகாடுகளிலும் தேவாலயங்களிலும் என்னைத் தேடினர்.

என்

தங்கப் பற்களைக் கவர்ந்து செல்வதற்காக மூன்று எலும்புக் கூடுகளைப் புதை குழிகளிருந்து தோண்டிப் பார்த்தனர்.

அவர்களால்என்னைக் கண்டுபிடிக்க முடிய வில்லை.

ஃபெடெரிகோ கார்சியா லார்கா, தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் இறப்பைப் பற்றிப் பாடி வைத்த பாடல் இது. அவன் பாடிவைத்தபடி, அவன் இறப்பும் இயல் பானதாக இல்லை ; கொலை செய்யப்பட் டான். கொலை செய்யப்பட்ட பிறகு அவன் உடம்பைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

13 I