பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 லார்கா பே சு ம் .ே பா து ம், தனது கவிதையை உணர்ச்சியோடு படித்துக் காட்டும் போதும், தன் நாடகத் திலிருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டும் போதும், அல்லது இசைப்பெட்டியின் முன்னமர்ந்து பாடும் போதும் அவனைச்சுற்றி ஒரு காந்தமண்டலம் தோன்றி ரசிகர்களை வசியப்படுத்தி ம ந் திர த் தா ல் பிணிக்கும் ! ' என்று ரஃபேல் ஆல்பெர்ட் என்ற கவிஞன் குறிப்பிடுகிறான்.

லார்காவைவிட ஏழு ஆண்டுகள் மூத்த கவிஞனான பெட்ரோ நூலினாஸ் அவன் எங்களை முன்னின்று நடத்திச் சென்ற பேரானந்தப் பெருவிருந்து ; அவனைப் பின்தொடர்ந்து செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, என்று உளந்திறந்து பாராட்டுகிறான்.

லார்காவின் நெருங்கிய நண்பரும் கவி ஞ ரு மா ன வின்சென்ட் அலெக்சாந்தர் என்பவர், ஒருமுறை தாம் கண்ட லார்கா தரிசனம் பற்றிக் குறிப்பிடும்போது, அமைதியான ஓர் இரவில் அழகான மேல்மாடியில், நிலவின் அமுத கிரணம் தன் முகத்தில் விழ, லார்கா நின்றுகொண்டிருந்தான். அவன் கைகள் வானத்தை நோக்கி உயர்ந்திருந்தன. ஆனால் அவன் பாதங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து காலத்தை வென்று, ஸ்பானிய மண்ணில் வேரூன்றி இருந்தன என்று மெய்மறந்து கூறுகிறார்.

இதயத்தில் ஈட்டியைப்போல் பாயக்கூடிய கவிதையை இன்னும் நான் எழுதவில்லை என்று ஒருமுறை லார்கா தன் நண்பனான கில்லன் என்பவனிடம் கூறினானாம். ஆனால் அக்கூற்று பொ. ய் யா ன து. அவன் பாடிய கவிதைகளில் பல படிப்பவரின் இதயத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவை. லார்கா படிக்கப்பட வேண்டியவன் அல்லன் ; காதலிக்கப்பட வேண்டியவன்.

<!ら