பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரறிஞர் அண்ணா பாவேந்தருக்கு எதிரில், நின்று கொண்டுதான் பேசுவார். அண்ணாத்துரை உட்கார்’ என்று பாவேந்தர் வற்புறுத்தினாலும் உட்காரமாட்டார். பாவேந்தரின் ஆளுமை அத்தகையது.

பாவேந்தரைப் போன்ற ஒரு பெருங்கவிஞரைப் பெற்று உலகுக்குக் கொடுத்ததற்காகப் புதுச்சேரி புகழ்மிக்க வரலாற்றைப் பெறுகிறது; புதுச்சேரியின் மற்ற புகழெல் லாம் இதற்கு அடுத்தாற் போலத்தான்.

வள்ளுவர் கோட்டம் போலப் பாவேந்தர் கோட்டம் ஒன்றைப் புதுவையில் நிறுவ வேண்டும்; இது புதுவை அரசின் கடமை. பாவேந்தருக்குத் தனித்துறை (Chair) அமைத்து, அவர் நூல்களை ஆய்வு செய்து மொழி பெயர்த்து, உலக அரங்கில் பரப்புவது புதுவைப் பல்கலைக் கழகத்தின் கடமை. வளர்க பாவேந்தர் புகழ்.

G

3 0