பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா

சுரதாவின் பேச்சும் எழுத்தும் சுவை யானவை. ஏன்? சுரதாவே மிகச் சுவை யானவர். அவரோடு பேசிக்கொண்டிருப் பது காதலியோடு பேசிக் கொண்டிருப்பது போலிருக்கும்; நேரம் போவதே தெரியாது.

ஒரு நாள் மாலை, நானும் கவிஞர் அப்துல் ரகுமானும் சுரதாவை மெரீனாக் கடற் கரைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து, அவரைப் பற்றியும், அவருடைய கவிதைக் கொள்கை பற்றியும், அவருடைய படைப்புகள் பற்றியும் இரண்டு மணிநேரம் ஒயாமல் கேள்விகள் கேட்டோம். அவரும் சலிப்பில்லாமல் பதில் கூறினார்.

சுரதாவைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னால், அவரோடு நாங்கள் மேற் கொண்ட உரையாடலை வெளியிட்டால், படிப்பவர்கள் அவரைப் புரிந்துகொண்டு அவர் பற்றிய ஆய்வினைப் படிக்க வசதி யாக இருக்கும் என்ற எண்ணத்தோடு கேள்வி-பதில் வடிவிலே அதை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

31