பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்துகடல் சங்கைபோல் நிறமும், நல்ல

கருநெய்தல் பூப்போன்ற கண்களோடே

ஒத்தபல சுழிகொண்ட குதிரை தன்னை

உலகத்தார் பாடலமென் றுரைப்பர் கண்டாய்

பல்லி சகுனப் பலன்

தலையில் நீ வந்து வீழ்ந்தால்

சண்டையாம்; தோளில் வீழ்ந்தால்

நலம்பல பெருகு மென்பர்

நானிதை நம்ப வில்லை.

மருத்துவம்

கனிந்தும் பயன்படாத பழம் எட்டிப்பழம் நீயோகாய்த்தும் பயன்படுகிறாய் என் கரங்களுக்கு! கனிந்தும் பயன்படுகிறாய் என் இதழ்களுக்கு. பித்த தேகம் உடையவர்களுக்குத் தான் கடைக் கண் சிவப்பாக இருக்கும்; உடல் எப்போதும் வெப்பமாக இருக்கும்.

உன் கடைக் கண்

சிவப்பாகவும் உன்னுடல் எப்போதும் வெப்பமாகவும் இருக்கிறதே! உன்னுடைய தேகமும் பித்த தேகந்தானா?- என்றான்