இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கத்துகடல் சங்கைபோல் நிறமும், நல்ல
கருநெய்தல் பூப்போன்ற கண்களோடே
ஒத்தபல சுழிகொண்ட குதிரை தன்னை
உலகத்தார் பாடலமென் றுரைப்பர் கண்டாய்
பல்லி சகுனப் பலன்
தலையில் நீ வந்து வீழ்ந்தால்
சண்டையாம்; தோளில் வீழ்ந்தால்
நலம்பல பெருகு மென்பர்
நானிதை நம்ப வில்லை.
மருத்துவம்
கனிந்தும் பயன்படாத பழம் எட்டிப்பழம் நீயோகாய்த்தும் பயன்படுகிறாய் என் கரங்களுக்கு! கனிந்தும் பயன்படுகிறாய் என் இதழ்களுக்கு. பித்த தேகம் உடையவர்களுக்குத் தான் கடைக் கண் சிவப்பாக இருக்கும்; உடல் எப்போதும் வெப்பமாக இருக்கும்.
உன் கடைக் கண்
சிவப்பாகவும் உன்னுடல் எப்போதும் வெப்பமாகவும் இருக்கிறதே! உன்னுடைய தேகமும் பித்த தேகந்தானா?- என்றான்