இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உடனே அவள் அவனைப் பார்த்துஒரு மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை இந்த - மங்கையிடம் கேட்கிறீர்களேஎன்றாள் அவள்.
- எச்சில் இரவு பக். 70
சனியன்றும், புதனன்றும் எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகி வருவோர்க்கு, மேலும் மேலும் தினைவாற்றல் அதிகரிக்கும்; இதனை நாங்கள்
நெடுங்காலம் ஆராய்ந்தே சொல்லு கின்றோம். - துறைமுகம் பக். 62
தாவரவியல்
வாட்டும் முன்பணி வருகை தருகையில் தின்னும் இலந்தை திரண்டு பழுக்கும்.
சுரதா இதழ் 1 - 3-68
பூகோளம்
ஆஸ்திரேலியாதீவுகளுக்குள் ஒரு தீவாகவும் கண்டங்களுக்குள் ஒரு கண்டமாகவும் இருப்பது போல் காமராஜர்தொண்டர்களுக்குத் தொண்டராகவும்
தலைவர்களுக்குத் தலைவராகவும் விளங்குகின்றார்.
67