பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கொய்யாக்கனி' என்ற பாடலில் ஒரு பெண்ணைப் பற்றிப் பாடவந்த சுரதா,

வெள்ளிக் கிழமை பிறந்தவளாம் - அவள்

வேலிப் பருத்தியைப் போன்றவளாம் பள்ளக் கடலவள் பார்வைகளாம் - புதுப் பங்கயப் பூக்களே செங்கைகளாம் என்று குறிப்பிடுகிறார். வெள்ளிக்கிழமை பிறந்ததனால் சோதிட சாத்திரப்படி அவள் சிறப்புப் பெற்றவளாக இருக் கலாம். ஆனால் வேலிப் பருத்தியைப் போன்றவளாம்" என்ற உவமையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேலிப் பருத்தி எந்தவிதத்தில் சிறந்தது? இந்த உவமை யின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் விடக்கூடாது என்று நான் பதார்த்த குணசித்தாமணியை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். வேலிப் பருத்திக்கு உத்தாமணி’ என்ற வேறு பெயரும் உண்டு.

'உணவில் மணத்தைத் தருகின்ற உத்தாமணியிலையால் வாதநோய், விஷம், ஜன்னி, திரிதோஷம், வாத குன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தநுர்வாதம், சுவாச நோய், பலவிதத் தடிப்புகள், அக்கினி மாந்தம் இவை நீங்கும்; தீபனமுண்டாம்' என்று வேலிப் பருத்தியின் குணம் கூறப்பட்டிருக்கிறது, இவற்றுள் எந்தப் பண்பை அப்பெண்ணுக்குப் பொருத்துவது? 'தீபனம் என்றால் பசி. வேலிப் பருத்தியிலையைத் துவையல் செய்து சாப்பிட் டால் நல்ல பசியெடுக்கும் என்பர். ஒருகால் இப்பெண் காதற் பசியைக் கிளப்பிவிடுவதால், கவிஞர் இவளை வேலிப் பருத்திக்கு ஒப்பிடுகிறாரோ என்று நானே குழம்புகிறேன்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் இறப்புக்கு இரங்கிச் சுரதா பாடிய பாடல் அவருடைய தேன் மழையில் இடம் பெற்றுள்ளது. அதில் ஒரு விருத்தப்பா :

70