பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதிரையை விட்டுக் கீழே குதித்தான் கான் சாகிப்; மாசா வையும் கீழே இறக்கினான். காதலர் ஒதுங்க அவ்விடத்தில் அடர்ந்த காடோ, புதர்களோ எதுவுமில்லை. வெட்ட வெளி! கான் சாகிப் மூளையில் ஒரு நூதனமான யோசனை தோன்றியது. குதிரையின் சேணத்தில் ஒரு சிறிய வெடி மருந்துப் பை இருந்தது. அந்த வெடிமருந்தைக் கையாலே வாரி வாயாலே ஊதினான். வெடிமருந்து காற்றில் பரவி, அவ்விடம் இருட்டாகிவிட்டது. அந்த இருட்டில் மாசா வைப் புணர்ந்தான் கான் சாகிப். எப்படி கற்பனை? பாட்டைப் படியுங்கள்.

? குருவிகளும் தாமரையும் அயர்ந்து தூங்கும்

குளிர் இரவில் உயிர்கொல்லும் புதுப் பீரங்கி மருந்தெடுத்து வாயாலே அதனை ஊதி

மாவீரன் ஓரிடத்தில் இருட்டு செய்தான். 'இருங்களென்று முந்தானை தனைய விழ்த்து

ஏந்திழையாள் திரைபோட ஆரம் பித்தாள். கரம்பிடித்தான் கட்டழகன்; கன்னி அந்தக்

கட்டழகன் தொட்டவுடன் குளிர்ந்து போனாள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சுரதா வின் கற்பனைகள் நம்பமுடியாதனவாகவும், இயற் ைக க்கு மாறுபட்டும், பொருத்தமில்லாமலும் இருந்தாலும், புதுமை கருதியும், சுவை க ரு தி யும் ஏற்றுக் .ெ கா ள் ளா ம ல் இருக்க

முடியவில்லை.

- சுரதாவின்

பலமும் பலவீனமும் ஆங்கிலக் கவிஞர்களுள் மிகவும் சுவையானவன் பைரன்; ஃப்ரஞ்சுக் கவிஞர்களுள் மிகவும் சுவையானவர் போதலேர். தமிழ்க் கவிஞர்களுள் மிக வு ம் சுவையானவர் சுரதா.

8 மங்கைமாசா - பிறகு 'நெல்லூர் நிகழ்ச்சி' என்று பெயர் மாற்றத்

தோடு வெளியிடப்பட்டுள்ளது. -

72