பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகியவர் என்ற தாட்சண்யம் பார்க்காமல் உள்ளத்தில் நினைப்பதை அப்படியே அம்மணமாகக் கொட்டி விடுவார். சில சமயம் கேட்பவர் நடுங்கி ஒடுங்கிப் போகுமளவுக்கு உண்மைகளைப் பச்சையாக உதறி விடுவார்.

கவிஞர் நன்னியூர் நாவரசன் சுரதாவின் அணுக்கச் சீடர் களில் ஒருவர்; காவிரிக் கரைப் பண்ணையார். கவிதை, பேசும் பாணி, நடைஉடை பாவனை யாவற்றிலும் அப்படியே சுரதாவை நூற்றுக்கு நூறு பின்பற்றுபவர். பொதுவாகச் சொன்னால் நாவரசன் ஒரு சுரதாயிஸ்ட் , சில சமயங்களில் சுரதா நன்னியூர் போய், நாவரசன் வீட்டில் அரச மரியாதையோடு தங்குவது வழக்கம்.

1982-இல் பொங்கல் விழாக் கவியரங்கிற்குத் தலைமை தாங்குவதற்குக் கரூர் வந்திருந்தார் சுரதா. நன்னியூர் நாவரசனும், சுரதாவின் கவிதையன்பர்களும், கல்லூரிப் பேராசிரியர் சிலரும், சுரதா தங்கியிருந்த அறையில் கூடியிருந்தனர். சுரதா தமக்கே உரிய பாணியில் சுவை யாகவும், சுறுசுறுப்பாகவும் பேசிக் கொண்டிருந்தார்.

தமிழகத்தில் மிகப் பெரிய பதவியில் இருப்பவரும், கவிஞரு மான ஒரு பிரமுகரின் தம்பி ஒருவரும், அக்கூட்டத்தில் இருந்தார். அவர் ஓயாமல் தமையனாரைப் பற்றியும், அவருடைய கவிதையைப் பற்றியும், பேசிக் கொண்டிருந் தார். கேட்டுக் கேட்டுச் சுரதாவுக்கு அலுத்துப் போய் விட்டது. கடைசியில் எரிச்சலும் வந்துவிட்டது.

"என்னய்யா சுத்த முட்டாளா இருக்கிற. ஓயாம உங்கண்ண புகழையே பேசிக்கிட்டிருக்கிறயே! நீ என்னய்யா சாதிச் சிருக்கிறே?' என்று வெடுக்கெனக் கேட்டார் சுரதா. அந்த நண்பர் முகம் தொங்கிப் போயிற்று.

84