பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போதலேரின் இக் கொள் கை ைய மாநகர்க் கொள்கை (The religious intoxication of great cities) arsingy திறனாய்வாளர் குறிப்பிடுகின்றனர்.

மேலைநாட்டுக் கலை இலக்கியப் போக்கை அடியோடு மாற்றியமைத்த ஆற்றல் மிக்க இ ய க் க ங் க ள | ன சர்ரியலிசம், சிம்பாலிசம் ஆகியவற்றின் ஊற்றுக் கண்ணே போதலேர்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அவருடைய கவிதை நூலான நச்சுப் பூக்கள்' (Les Fleurs du Mal) 1 857 -Đgib -ąsior(P) (ipssiropgevrrs வெளியிடப்பட்டது. அதில் தெய்வ நிந்தனை காணப்படு கிறது என்று கூறிச் சமயவாதிகள் கண்டனக் குரல் எழுப் பினர். படிப்பவர் உள்ளத்தில் கீழ்த்தரமான உணர்ச்சிகளை அவர் கவிதைகள் தூண்டுவதாகக் குற்றம் சாட்டி, பிரெஞ்சு அரசாங்கம் 300 பிராங்க் அவருக்கு அபராதம் விதித்தது.

தனக்குப் பின் வந்த சந்ததியினரிடையே நச்சுப் பூக்களைப் போல் அபரிதமான செல்வாக்குப் பெற்ற வேறு கவிதை துல் மேலை நாட்டில் எதுவுமில்லை என்று சொல்லாம். மேலை நாட்டில் கவிதைப் புதுமையே (Modernism in poetry) இந்நூலில் இருந்துதான் தொடங்குகிறது.

புதுக் கவிஞர்களின் முன்மாதிரியே (Archtype) போதலேர் தான். புதுக் கவிஞர்களின் பண்புகளான வரையறுக்கப் பட்ட தனிமை, எதிர்ப்புணர்ச்சி, மனச் சஞ்சலம், தன்னையே அழித்துக் கொள்ளும் ஆத்திர உணர்ச்சி யாவும் போதலேரிடமிருந்து பெற்றவையே. பிறர் தூற்றும்படி புரட்சிகரமாக வாழ்த்த போதலேருடைய வாழ்க்கையின் அடிக்குறிப்புப் பற்றிய வரலாறே, புதுக் கவிதையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய வரலாறாகும்’ என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர் குறிப்பிடுவது பொருத்தமே.

9 |