பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14



துணிச்சல் காரன்

மாநிலத்தை யாளுமொரு மகராசா -அவர்முன் மண்டியிட்டுத் தூதுவந்தோர் பேசி நின்றார். தேனிகர்த்த பழங்கள்.சில கொண்டு வந்தோம் -இவைபோல் தேடினாலும் பூவுலகில் கிடைக்கா தென்போம். சுவைமிகுந்த பழங்களைத்தாம் தின்றவர்கள் -உலகில் சுகமுடனே சாவில்லாமல் நீடு வாழ்வார். இவையனைத்தும் எங்களன்புக் காணிக்கையாய் -தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுகின்றோம் என்று சொன்னார். இந்தமொழி கேட்டிருந்த வீர னொருவன் -உடன் எழுந்தோடிப் பழத்திலொன்றைக் கடித்துக் தின்றான்.