பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22



அழகன்

ஒருநாள் லிங்கன் வீதியிலே உலவச் சென்ற பொழுதினிலே குறும்பன் ஒருவன் எதிர்ப்பட்டான் குதிரை வண்டிக் காரணவன். 'ஐயா ஐயா உமைத்தேடி அலைந்த நாட்கள் மிகப்பலவே மெய்யாய் இன்று தான்கண்டேன் மிகவும் அமைதி கொண்டேனே. உமக்குச் சொந்த மானபொருள் ஒன்று நீண்ட நாளாக எனக்குப் பாரம் போலுளதே இன்று தொல்லை தீர்ந்த??தென்றான். பார்த்த தில்லை அவனை ஒரு பண்டம் தாமும் கொடுத்ததில்லை சீர்த்தி மிக்க லிங்கனவர் சிந்தைக் கெதுவும் தோன்றவில்லை. அழுக்கும் துருவும் ஏறிமிக மழுங்கிப் போன கத்தியொன்றை இழுக்கு மிக்க அம்மனிதன் இதுதான்?’ என்று காட்டி நின்றான்.