பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


இதுவா? எனதா??? எனக்கூறி எதுவும் புரியா திருந்தவர்முன் 'இதுதான்! இதுதான்! இதுவந்த கதையும் இதுதான்!?? என்றுரைத்தான். பெரிய மனிதர் ஒருவர்இதைப் பேணி வைக்கு மாறளித்தார். 'உரிய வரை நீ காணுங்கால் உடனே இதனைச் சேர்த்திடுவாய். போரில் உள்ள மனிதரில்நீ பார்க்கும் அழகில் லாதவனைச் சேரும் இந்தப் பொருளெனவே தெரிவித்தார்அப் பெரியவரே. அழகில் லாதார் யாரென்றே அலைந்து தேடிக் கடைசியிலே வழியில் உம்மைக் கண்டுவிட்டேன்; வாங்கிக் கொள்வீர்!’ என்றுரைத்தான். துடுக்காய்ப் பழித்து நிற்பவன்மேல் துளியும் கோபம் கொள்ளாமல் வெடுக்கென் றந்தக் கத்திதனை விரைந்து லிங்கன் வாங்கினரே, எனது பொருளை இத்தனைநாள் இனிது பாது காத்ததுடன் தனதாய் வைத்துக் கொள்ளாமல் தந்த தற்கு நன்றியுளேன்.??