பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


அருளும் அன்பும் பொருந்தியதாம் அழகு வடிவம் தாங்கியொரு பெரியார் வந்தார் அவர்எதுவும் பிச்சைக் காரர்க் கீயவில்லை. கந்தன் அவர்பின் ஒடினனே காசு கேட்டு நின்றனனே அந்தப் பெரியார் அவனுக்கோர் அரிய கருத்தைக் கூறினரே. தோழ்ந்து தாழ்ந்து எத்தனைநாள் தம்பி நீயும் பிழைத்திடுவாய் ஆழ்ந்து சிந்தித் திடுவாயேல் அருமை யான வழிகாண்பாய் தன்னை நம்பி வாழ்வோனே தலைநிமிர்ந்து வாழ்ந்திடுவான்?? என்னும் கருத்தைச் சொல்லியவர் ஏகி விட்டார் தம் வழியே. பிச்சைக் கலைந்தோன் வேலைக்குப் பெரிதும் அலைந்து திரிந்தானே தச்சன் ஒருவன் அவனுக்குத் தக்க வேலை கொடுத்தனனே. உழைத்துப் பிழைத்தான் பிறர்தயவை ஒருநா ளேனும் நாடாதே அழைத்துப் பிறர்தாம் பாராட்டும் அரிய நிலையை அடைந்தானே!